யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(22) பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வைத்திய பரிசோதனை செய்யவுள்ளதாக கோரி குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
யோசித ராஜபக்ஷ மீது நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.