யோஷித உள்ளிட்டோரின் பிணை மனு – 29 ஆம் திகதி பரிசீலனை

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்களையும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.