யோஷித தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் SLPP சிவப்பு சமிஞ்ஞை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் இவர் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரத் தகவல்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில், அவ்வாறான எந்தவொரு முன்னேற்பாடும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே யோஷித ராஜபக்ஷ கடற்படை சேவையில் இருந்து விலகுவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.