யோஷித நிதி மோசடி விசாரணைப்பிரிவு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ஷவிடம்  இன்று(10) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சொத்து சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்ததாக  மேலும் தெரியவந்துள்ளது.

(rizmira)