யோஷித வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனுவின் தீர்ப்பு 22 அன்று..

நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ, வௌிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்த தீர்ப்பு எதிர்வரும் 22ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(20) இதனைக் குறிப்பிட்டுள்ளது.

வைத்திய சிகிச்சைகளுக்காக வௌிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனக் கோரி, யோசித்தவின் சட்டத்தரணியால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.