ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளின் பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் போன்றதொரு வீரர் ஒருவரை கண்டுபிடிப்பது இலேசான காரியமல்ல என இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க கிரிக் இன்போ இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

ரங்கன ஹேரத் ஓய்வு பெற்றதன் அவரது இடத்தினை ஈடு செய்வது யாரென்ற கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.

சுழற் பந்து வீச்சாளர்கள் இருந்தும் ரங்கன ஹேரத் போன்றதொரு வீரரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு இலேசானதல்ல, ரங்கன, சங்கக்கார மற்றும் முரளிதரன் ஆகியோர் ஓய்வு பெற்றதன் பின்னர் அவர்களை போன்ற வீரர்களையே ரசிகர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

R.Rishma