ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்திலுள்ள பீடங்களுக்கு இன்று முதல் காலவரையறையற்ற பூட்டு.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் நடாத்திச் செல்லப்படும் பீடங்கள் இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

சமூகவியல்,மனிதநேயவியல், செயல்முறை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை ஆகிய பீடங்கள் நீர் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

எனினும் மற்றைய தேர்வு செயற்பாடுகள் வழமைப்போல இடம்பெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.