ரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நிர்வாக கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தங்கி இருந்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் இன்று(22) முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.