ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை மறுமணம் செய்ய உள்ளார்.
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் சௌந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனத்தின் மூலம் சுவாமி வெங்கடாஜலபதியை அவர்கள் தரிசனம் செய்தனர்.
சௌந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை சுவாமி பாதங்களில் வைத்து வணங்கி பூஜை செய்து பெற்றுக்கொண்டனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.