ரஞ்சன் சில்வா கொலை தொடர்பில் ஒருவர் கைது…

தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் மற்றும் கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை, கே, ரஞ்சன் டி சில்வா கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த லமாஹேவாகே நிகால் திசாநாயக்க எனும் பெபா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது குறித்த நபரிடம் 02 கிராமும் 660 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி ரத்மலானையில் வைத்து தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.