(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்கு சாத்திம் காணப்படுவதாக பொதுஜன முன்ணனியின் போஷகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதாக இருந்தால் தான் போட்டியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.
இதேவேளை, சஜித் பிரமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்நிலையிலேயே பசில் ராஜபக்ஸ வித்தியாசமான கருத்தொன்றை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.