ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியான செய்தி கோட்டாபயவின் கட்டுக்கதை – மங்கள [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியானது கோட்டாபயவின் ஆதரவாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாகும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெறும் ‘என்டபிரைஸ் ஸ்ரீலங்கா’ நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.