ரத்கம வர்த்தகர்கள் கொலையின் சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) காலி -ரத்கம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த உள்ளிட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வன அதிகாரியொருவரும் தொடர்ந்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

காலி பிரதம நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.