நைஜீரியாவில் அதிக விலைக்கு மனித மாமிசத்தை விற்று வந்த ஒரு உணவகத்தை அதிகாரிகள் இழுத்து மூடியுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இயங்கிவந்த அந்த ஹொட்டலில் வேலை செய்பவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருப்பதாக பொலிசாருக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த ஹொட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘பப்ஸ்’ போன்ற ஒருவகை பலகாரத்தில் மனித மாமிசத்தை கலந்து தயாரிக்கப்படுவதை கண்டுபிடித்தனர்.
அங்குள்ள அலமாரியில் இருந்த ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட மனித தலைகள் வைக்கப்படிருந்ததை கண்டு திடுக்கிட்ட பொலிசார், அந்த ஹொட்டலில் பணியாற்றும் பத்துக்கும் அதிகமானவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நைஜீரியாவில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களின் நான்கு நாள் சம்பளத்தை, அந்த மாமிசத்திற்கான விலையாக அந்த உணவகம் பெற்றுள்ளது.
இதுகுறித்து நபர் ஒருவர் கூறுகையில், அந்த உணவகத்தில் சிறிய துண்டு மாமிசம் தான் சாப்பிட்டேன், அதற்கு விலையாக ரூ.217 வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.