சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்து பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(20) மாளிகாகந்த பதில் மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
ஜீலை 21ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ரயன் ஜயலத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
(rizmira)