(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை மீண்டும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று(11) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.