கண்டியிலிருந்து பதுளை செல்லும் ரயிலில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக நானுஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்திக உசாந்த ஜயரத்ன (47) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இவரிடமிருந்தபாக்கட்டில் வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருந்தே இந்த தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் கண்டி ரயில் நிலையத்தில் கம்பளை நோக்கி செல்வதற்காக பயணச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவரது சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.