அளவ்வ – வலகும்புர சந்தி பகுதியிலுள்ள ரயில் குறுக்கு வீதியில் வைத்து முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில், இராணுவ சிப்பாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதி சமிஞ்சையை கவனிக்காது சென்றமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அளவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.