ரயில்வே பணியாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று(23) முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.
ரயில்வே தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியுடன் கடந்த 18ஆம் திகதி முதல் கட்ட பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.