இன்று(13) காலை அமைச்சரவை உபகுழுவுடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பேச்சுவார்தையை தொடர்ந்து ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவுடன், இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமது வேலைநிறுத்தத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக, தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.