வாதுவை பொத்துபிட்டிய பிரதேசத்தில் ரயில் – கார் என்பன மோதி இன்று(27) ஏற்பட்ட விபத்தில் ஐவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலியிருந்து கொழும்பு மருதானை நோக்கி வந்த ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் கடவையின் ஊடாக பயணிக்க முற்பட்ட காரே ரயிலில் மோதியுள்ளது. இந்த விபத்தில் இன்னும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




