ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இன்று(11) பாராளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இன்று(11) பாராளுமன்றத்தில் சிறிய விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.