ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…

தாய்வான் நாட்டின் இலான் பகுதியில் நேற்று கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

360- க்கும் அதிகமான பயணிகள் பயணித்த குறித்த ரயிலின் முன்பகுதியில் இருந்த 8 பெட்டிகள் முற்றிலுமாக சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடம்புரள்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அந்த ரயில் இயல்பு நிலைக்கு மாறாக குலுங்கியும், அதிர்ந்தும் ஓடிக் கொண்டிருந்ததாக அதில் வந்த சில பயணிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.