ரயில் தண்டவாளத்தில் பயணித்தால் கைது செய்யப்படுவர் – ரயில்வே திணைக்களம்

ரயில் மூலம் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் ரயில் பாதைகளில் (தண்டவாளத்தில்) நடப்பவர்களை கைது செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமானது நாளை முதல் அமுலாகும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாதாந்தம் 27 தொடக்கம் 30 வரையானோர் தற்கொலை மற்றும் விபத்துகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

எனவே இதனை தடுக்கும் வகையிலேயே இந்தச் சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக குறித்த திணைக்களம் மேலும்  கூறியுள்ளது.