(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவல் நிலையினை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளை பயன்படுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளின் குறைவு காரணமாக நகரங்களுக்கு இடையிலான சில ரயில் பயணங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சேவையில் உள்ள ரயிலில் பயணிப்பவர்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என பிரதான பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.