புகையிரத போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு…

பொல்கஹவலையில் நேற்று(06) இடம்பெற்ற புகையிரத விபத்து காரணமாக குறித்த புகையிரத மார்க்கம் ஊடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் தாமத்தித்தேனும் புகையிரத சேவையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் 32 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.