ரவிக்கு ர்திரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படின் ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்கும்

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி  பிணை முறி மோசடி விவகாரம் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு முன் நாளை 2 சாட்சியமளிக்க இருக்கும் நிலையில், அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது பற்றி பல தரப்பிலிருந்தும்  செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹஷிம் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால்       ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் அதனை தோற்கடிக்கும் எனவும்
நிரூபிக்கப்படின் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.