ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை – நாமல்  

கூட்டு எதிர்க்கட்சி இன்று(26) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பேசும் போது, வெளிவிவகார அமைச்சர் ரவி  கருணாநாயக்காவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வரும் நடவடிக்கையில் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் கூட்டு எதிர்க்கட்சி தன்னிடமுள்ள முழு சக்தியையும் பயன்படுத்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகளை உலகிற்கு வெளிப்படுதுத்துவோம் என்று கூறினார்.