ராகம கெந்தலியத்த பாலுவ , கனேமுல்ல பிரதேசத்தில் வாகன எண்ணெய் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றிரவு(12) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் காரணமாக எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என ராகமை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் , பிரதேசவாசிகள் மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் , தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்பு தொடர்பில் இதுவரை கணிக்கப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பில் ராகம பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.