ராஜகிரிய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீர்வெட்டு..

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(09) பிற்பகல் 2 மணி முதல் நாளை(10) அதிகாலை 5 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றம் ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-reeshmaa..