முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14,000 கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி செயலாளர் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(07) கையளிக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன செயற்பட்டபோது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் முன்னெடுப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.