ராஜிதவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சை வழங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு கோரிக்கை..

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு புதிய அரசின் கீழ் மீண்டும் ஒருமுறை சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

குறித்த சங்கத்தினால் “அவசர கவனத்திற்கு” எனும் தலைப்பின் கீழ் குறித்த கோரிக்கை கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.