ராஜித்தவிற்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இன்று  பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.