(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையை நேற்று(24) பிறப்பித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை கைது செய்வதற்காக, குற்றப்புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் கொழும்பிலும் களுத்துறையிலும் வலைவிரித்துள்ளதாக அறிய முடிகின்றது.
விடுமுறை நாட்களில் கைது செய்யப்பட்டால் நீண்ட நாட்களில் தடுத்து வைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதனாலே இந்த தலைமறைவு என கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.