ரூ.16,060,000 பெறுமதியுடைய ஹெரோயீனுடன் கட்டுநாயக்கவில் பாகிஸ்தான் பிரஜை கைது..

பிரவுன் சுகர் வகையைச் சேர்ந்த, ஒரு தொகை ஹெரோயினை, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(17) ​அதிகாலை, கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜையே கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து, 1.606Kg கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 16,060,000 ரூபாய் என, கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.