ரூ.2500 அதிகரிக்கப்பட்டதை உடனடியாக நீக்க வேண்டும் – இல்லையேல் தொடர்ச்சியாக போராட்டம்..

வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று(11) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

அவ்வாறு நீக்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த வாரமளவில் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் மேலும் கூறினார்.