(FASTNEWS|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் அமில சம்பத் மீளவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று(07) மொரவக நீதவான் சசிகா மிதுனாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.