லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

(FASTNEWS|COLOMBO) – மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களனி கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.