சண்டேலீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் ஓய்வுபெற்ற இரண்டு பிரதி பொலிஸ்மா அதிபர்களை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த சீஐடியினர் தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே குறித்த இந்தக் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன
இந்த விசாரணைகளின்போது லசந்தவின் கொலை மாத்திரமல்லாமல், சிரேஸ்ட செய்தியாளர் உபாலி தென்னக்கோன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் பிரதி பொலிஸ்மா அதிபர்களை கைது செய்யும் வகையிலான ஆலோசனைகளை சீஐடியினர், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.