ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்வின் கொலை தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று(20) சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பிரவினர் பொன்சேகாவிடம் இவ்வாறு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து வினவியபோது, குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல்களை வழங்க முடியாது என பொலிஸ ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்திருந்தது.