லசந்த விக்கிரமதுங்க கொலை குறித்து கோட்டபயவிடம் விசாரணை…

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கடந்த வெள்ளியன்று(20) குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கோட்டாபயவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சரத் பொன்சேகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலையுடன் தொடர்புடைய முக்கிய பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.