ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைதான முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரசந்த நாணயக்கார மற்றும் உப காவல்துறை பரிசோதகர் திஸ்ஸசிறி சுகதபால ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று(14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.