லசித் மாலிங்க தாயகம் திரும்பினார்..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க இன்று(04) அதிகாலை இந்தியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இன்று(04) ஆரம்பமாகவுள்ள மாகாண ஒருநாள் போட்டிகளில் காலி அணிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது. அவை கண்டி – காலி அணிகள் மற்றும் கொழும்பு – தம்புள்ளை அணிகளே இவ்வாறு போட்டியிடவுள்ளன.