லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்.
பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.