பிரித்தானியா, லண்டன் நகரில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வர்த்தக மற்றும் வியாபாரிகள் பங்குகொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கையை சேர்ந்த தகவல் மற்றும் தொலைத்தொடர்பு (ICT) துறையைச்சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நாமம் உள்ளிட்ட விடயங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வர்த்தகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.