காலி – லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இரு மாணவக் குழுக்களுக்கு இடையே நேற்று(29) பகல் இடம்பெற்ற மோதலின் பின்னர் எதிர்வரும் திங்கள்(03) வரையில் தற்காலிகமாக மூடப்படுவதாக குறித்த நிறுவன நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப துறை மாணவர்கள் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள மாணவர்கள் சிலருக்கு இடையே இடம்பெற்ற குறித்த மோதலில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள தொழில்நுட்ப துறை மாணவர்கள் இருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.