லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு..

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக குற்றஞ் சாட்டப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பான வழக்கு இன்று(22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)