லலித் மற்றும் அனுஷ தொடர்பில் சட்டமா அதிபர் மற்றும் FCID பணிப்பாளர் ஆகியோருக்கு அழைப்பாணை..

சீல் ஆடை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமைவாக, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினரின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(14) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேல்நீதிமன்றினால் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குறித்த இருவரதும் பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று(14) பரிசீலிக்கப்பட்ட போதே மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmra)