மாணவ செயற் குழு உறுப்பினர்களான லஹிரு வீரசேகர, டெம்பிடியே சுகதானந்த தேரர், சுஜித பிரியங்கர பெரேரா உள்ளிட்ட செயற் குழு உறுப்பினர்கள் எவரும், ஜனாதிபதி செயலகம் அல்லது எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் அத்துமீறி நுழையக் கூடாது என, இன்று(10) கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று(10) மாணவ செயற்குழு உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கூடவுள்ளதாக, புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(rizmira)