லிந்துலையில் 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்…

லிந்துலை – மெராயா நகரில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் இன்று(18) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதிலும் பொருட்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.